ஒரு கையில் பாட்டில், மற்றொன்றில் சிகிரெட்; நடுரோட்டில் இளம் தம்பதி அட்டூழியம்.!



Telangana Couple Drinking in Road 

மதுப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கு எனினும், அதனை இன்றளவில் இருபாலரும் அருந்தி உடல்நலனை கெடுத்து வருகின்றனர். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், நவகோள் பகுதியில் இன்று காலை குடியிருப்பு வாசிகள் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடைபயணம் மேற்கொண்டு இருந்தனர். 

கண்டித்த மக்கள்

அச்சமயம் நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தியிருந்த தம்பதி ஒருவர், மதுபானம் அருந்திவிட்டு புகை பிடித்துக்கொண்டு இருந்தனர். இதனை கண்ட மக்கள் அவர்களை கண்டிக்க இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!

மதுபோதையில் வாக்குவாதம்

மதுபோதையில் இருந்த பெண்மணி தொடர்ந்து மக்களிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இருவரின் மீது கடும் நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

இதையும் படிங்க: டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..