மனைவியை சந்தேகப்பட்டு செல்போனில் சிப்; இறுதியில் நடந்த விபரீத கொலை.. இப்படியுமா மனுசங்க இருப்பாங்க?.!



Uttar Pradesh Badaun wife Killed by Husband and his Girl Friend 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவுன் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி மீரா. இவரின் கணவர் ஆகாஷ். தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் நடைபெற்றதால் இருந்து ஆகாஷுக்கு தனது மனைவி மீரா மீது சந்தேகம் இருந்துள்ளது. 

மேலும், அவர் யாருடன் பேசுகிறார் என்பதை கண்காணிக்க, செல்போனில் சிப் வைத்து சோதித்துள்ளார். மீரா தனது தோழியுடன் மட்டும் அவ்வப்போது பேசி வந்து இருக்கிறார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு ஆகாஷுக்கு பூஜா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!

அன்பான மனைவி கழுத்தை நெரித்துக்கொலை

ஒருகட்டத்தில் தனது கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்ட ஆகாஷ், மனைவி மீராவை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்று தனது மனைவியை அவரின் அம்மா வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என பேசி இருக்கிறார். 

கணவரை நம்பிச் சென்ற மனைவியை தனது கள்ளக்காதலி பூஜா, நண்பர் ரூபேந்திரன், கணவர் ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து ஜூலை 28 அன்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். உடலை காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதையும் படிங்க: காதலியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ காதலன்; நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவத்தின் காரணம்.!