காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை; நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!



Uttar Pradesh Sahanpur Minor Girl Killed 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாங்பூர் பகுதியில் வசித்து வருபவர் வர்ஷே. இவர் தனது மூத்த சகோதரரின் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் முடிந்து மனைவி, வைஷாலி என்ற 5 வயதுடைய மகள் இருக்கிறார். இளம்பெண் வர்ஷே இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தெரியவருகிறது.

காதலருடன் உல்லாசம்

இந்நிலையில், சம்பவத்தன்று தனது காதலரை வீட்டிற்கு அழைத்து வந்த பெண்மணி, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த செயலை சிறுமி வைஷாலி நேரில் பார்த்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்து விடலாம் என காதல் ஜோடி அஞ்சியுள்ளது. 

இதையும் படிங்க: திருநங்கையுடன் 20 வருட லிவிங் டு கெதர்.. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. போலீசுக்கு அதிர்ச்சி.!

நேரில் பார்த்த சிறுமி கொடூர கொலை

இதனையடுத்து, சிறுமி வைஷாலியை தனது காதலருடன் சேர்ந்து கொலை செய்த வர்ஷே, பின் சிறுமி மயங்கி உயிரிழந்ததாக நாடகமாடி இருக்கிறார். காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து, காவல் துறையினர் வர்ஷே மற்றும் அவரின் காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: "உன் சாதிய என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க" குட் பை சொன்ன காதலன்.! உயிரை மாய்த்த பெண்.!