13 வயது சிறுமி கட்டாய திருமணம்... பாலியல் தொல்லை.!! 47 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!



47-year-old-man-arrested-for-child-marriage-and-sexual

கோவை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 47 வயது நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

13 வயது சிறுமி கட்டாய திருமணம்

மதுரையைச் சேர்ந்த ராபர்ட் கிளைவ் என்ற 47 வயது நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியிலுள்ள பஞ்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் திருமணம் செய்து கொண்ட சிறுமியை தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளார்.

tamilnadu

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை

ராபர்ட் கிளைவ் அந்த சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ராபர்ட் கிளைவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: இளம் பெண்ணிற்கு ஆபாச மெசேஜ்... தட்டி கேட்ட கணவன் வெட்டி படுகொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!

போக்சோ வழக்கு பதிவு

இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் அவர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "63 வயசுல தேவையா கோபி..." திருமண ஆசை காட்டி சித்த வைத்தியருக்கு ஆப்பு.!! நகைகளுடன் கம்பி நீட்டிய பெண்.!!