ரஷ்யா, தாய் பெண்களை அழைத்துவந்து ஹைடெக் விபசாரம்; வாட்ஸப்பில் ஏஜென்ட் குழு.. கோவையை அதிரவைத்த சம்பவம்.!



Coimbatore Prostitution Gang 

கோவை மாநகரில் இளம்பெண்கள், வெளிநாட்டு இளம்பெண்கள் ஆகியோரை வீபசாரத்தில் ஈடுபடுத்திய சிக்கந்தர் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை, சேலம், திருப்பூர் உட்பட பல நகரங்களில் இருக்கும் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 

இந்தியா மட்டுமல்லாது ரஷியா உட்பட வெளிநாடுகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தொழிலை சிக்கந்தர் மேற்கொண்டுள்ளார். வாட்ஸப்பில் ஆள் இந்தியா ஏஜென்ட் குரூப் வைத்து, இந்தியாவில் விபசாரத்தை பெருக்கி இருக்கின்றனர். இந்த குழுவில் இருந்தோரையும் கைது செய்ய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு மூளையாக சிக்கந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொல்கத்தாவில் கடந்த 4 ஆண்டுகளாக பதுங்கியிருந்து சிக்கந்தர் பாலியல் தொழிலை செய்து வந்துள்ளனர். ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேஷியாவில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டுள்ளது. 15 பெண்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளார். சிக்கந்தர் பாஷா மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: வாட்ஸப்பில் போட்டோ, ஜிபே-வில் பணம்.. உளுந்தூர்பேட்டையில் ஹைடெக் விபச்சாரம்..!

மனித கடத்தலில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த இலாப பணத்தை வைத்து சிக்கந்தர் பெங்களூரில் பிரியாணி கடை ஒன்றையும் திறந்து இருக்கிறார். கொல்கத்தாவில் வீடு எடுத்து, தமிழ்நாட்டுக்கு செல்போன் அனுப்பி வைத்து, 16 செல்போன்கள் உதவியுடன் தரகர்கள் நிர்ணயிக்கப்பட்டு பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாநகரில் இருக்கும் 5 விடுதிகளுக்கு இக்கும்பல் அவ்வப்போது சென்றுவந்த நிலையில், விடுதிகளின் விபரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: மனைவியை விபசாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்திய 23 வயது கணவன்; சேலத்தில் பகீர் சம்பவம்.!