50 ஆண்களை ஏமாற்றிய மோசடி ராணி சத்யாவுக்கு ஜாமின்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.! 



Marriage Cheating Case Sathya Bail Granted by Chennai HC

தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் தொழிலதிபர்கள் முதல் திருமணத்திற்கு வரன் தேடிய நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் வரை பலரையும் திருமணம் செய்து ஏமாற்றி, பணம்-நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய பெண்மணி சத்யா. 

இவர் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் வழங்கப்பட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மீதான வழக்குகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

cheating

ஜாமின் வழங்கி உத்தரவு

இதனிடையே, அவர் ஜாமின் கேட்டு கிளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்ட்டன. இதனையடுத்து, தனக்கு ஜாமின் வழங்கக்கூறி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் சத்யா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சுற்றுலாப்பயணி தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்; குவியும் பாராட்டுக்கள்.!

இதையும் படிங்க: அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூடாது; தாய் கண்டித்ததால் 14 வயது சிறுமி தற்கொலை.!