சுற்றுலாப்பயணி தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்; குவியும் பாராட்டுக்கள்.!



pondicherry-auto-driver-gives-mobile-to-nepal-woman

புதுச்சேரி மாநிலத்திற்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அங்குள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்துவிட்டு பின் பயணம் செய்கின்றனர். 

செல்போனை தவறவிட்ட பயணி

இதனிடையே, நேபாளம் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர், சம்பவத்தன்று புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அவர் ஆட்டோ ஒன்றில் பயணித்தபோது, தனது செல்போனை தவறவிட்டு இருக்கிறார். இதனை எதிர்பாராத விதமாக ஆட்டோ ஓட்டுநர் கண்டெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூடாது; தாய் கண்டித்ததால் 14 வயது சிறுமி தற்கொலை.!

ஆட்டோ ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்

நேபாள பெண் பயணியும் தனது ஊருக்கு செல்ல பேருந்தில் புறப்பட்ட நிலையில், உடனடியாக பேருந்தின் விபரங்களை பெற்று ஆட்டோவில் பேருந்தை விரட்டிச்சென்று நேபாள பயணியின் செல்போனை அவரிடமே பத்திரமாக ஒப்படைத்தனர். இந்த விஷயம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: டூவீலர் அன்பர்களே கவனம்... இருக்கைக்கு அடியில் 2 அடி நீள விஷத்தன்மை கொண்ட விரியன் பாம்பு.!