பிறந்த குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தடம்; அந்த நொடியில் பதறவைக்கும் சம்பவம்.!



Russia Partner shot Pregnant Woman 


ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் வசித்து வரும் தம்பதியின் அன்புக்கு அடையாளமாக, பெண்மணி கருத்தரித்து இருக்கிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் அவர் பிரசவத்திற்கு தயாராகி இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது.

குண்டு பாய்ந்து தப்பித்த 2 உயிர்கள்

இந்நிலையில், சம்பவத்தன்று பெண்ணின் கணவர் தவறுதலாக தனது துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளார். இதில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் பெண் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

தாயம்-சேயும் நலம்

அங்கு பெண்ணின் குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் வெளியே எடுக்கப்பட்டது. உடலில் 1 செமீ நீளம், அகலம் கொண்ட குண்டு துளைக்கப்பட்டு இருந்த நிலையில், அதனையும் மருத்துவர்கள் பத்திரமாக எடுத்தனர். நல்வாய்ப்பாக தாயும்-சேயும் நலமுடன் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: மத்திய கிழக்கில் அடுத்த போர்? தாக்குப்பிடிக்குமா இஸ்ரேல்?.. ஈரான் தலைமை மதகுரு பகீர் அறிவிப்பு.!

இதையும் படிங்க: ஏர் பிரையர் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பல்லியை அனுப்பிய அமேசான்; பதறவைக்கும் சம்பவம்.!!