#Breaking: ஒரு நிமிடம் பொறுத்திருக்கலாமே? அரசுப்பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் துள்ளத்துடிக்க மரணம்... பதறவைக்கும் காட்சிகள்.!



in-telangana-hyderabad-woman-died-bus-accident

 

சாலையை அவசரமாக கடந்த பெண்மணி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், நாராயணப்பேட்டை பகுதியில் இன்று கோர விபத்து ஒன்று நடைபெற்றது. இந்த விபத்தில் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: வெந்நீரில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி; குளிக்கும்போது நேர்ந்த சோகம்.!

கர்னூலில் இருந்து நாராயணப்பேட்டை நோக்கி பேருந்து பயணம் செய்த நிலையில், பெண்மணி ஒருவர் சாலை நடுவே இருந்து, ஓரத்திற்கு கடக்க முற்பட்டார். 

அப்போது, பேருந்து வேகமாக வந்த நிலையில், பெண்ணும் அவசரமாக சாலையை கடந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில், பெண் சம்பவ இடத்திலேயே சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 Telangana

பதைபதைப்பு சம்பவம்

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாராயணப்பேட்டை காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் உயிரிழந்ததன் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

ஒரு நிமிடம் தாமதமாக நின்று வந்திருந்தால் பெண் உயிரிழந்து இருக்கமாட்டார் என அதனை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 3 பேர் உடல் கருகி பரிதாப பலி.!