#Breaking: கனிமவளக்கொல்லையை எதிர்த்த அதிமுக நிர்வாகி கொடூர கொலை.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!



edappadi-palanisamy-on-pudukkottai-aiadmk-member-killed

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜகவர் அலி, நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சமூக ஆர்வலரான அலி, குவாரிக்கு எதிராக வழக்குத்தொடுத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்து, அதிகாரிகளால் குவாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

லாரி ஏற்றிப்படுகொலை

இதனிடையே, ஜவஹர் அலியின் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை; திருநெல்வேலியை நடுங்க வைத்த இரட்டைக்கொலை.!

Murder

வழக்கை அரசு திசைதிருப்புகிறது

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

உரிய விசாரணை வேண்டும்

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

இதையும் படிங்க: செல்போன் மாயமான தகராறில் பயங்கரம்; தொழிலாளி கழுத்தறுத்து கொலை.!