காதலனுடன் தனிமையில் இருந்த 18 வயது தங்கை; துள்ளத்துடிக்க கொன்ற சகோதரர்கள்.! 



in Jharkhand Chatra Sister Killed by Brother Love Issue 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஸத்ரா மாவட்டம், சேதா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது தலித் சிறுமி ஒருவர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியதை தொடர்ந்து, ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமி

இந்நிலையில், சிறுமி நேற்று காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள், காதல் ஜோடியை கட்டுக்குள் இழுத்துச்சென்று கோடரியால் வெட்டி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயத்துடன் தப்பிய இளைஞர், தனது கிராமத்திற்கு சென்று ஊர் மக்களை அழைத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: செல்போனுக்காக நடந்த பயங்கரம்; தம்பியை சுத்தியலால் அடித்தே கொலை செய்த 18 வயது அண்ணன்.!

கோடரியால் வெட்டிக்கொன்ற சகோதரர்

அதற்குள் சிறுமி சகோதரரால் கோடரியால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காதலன் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்க்கிங் தகராறில் 31 வயது ஐடி மேனேஜர் கார் ஏற்றிக்கொலை; பார்க்கிங் பட பாணியில் படுபயங்கர சம்பவம்.!