14 வயது சிறுமியை சீரழித்து, நிறைமாத கர்ப்பிணியாக்கிய அத்தை மகன்; வீட்டிற்கு வந்துசென்றபோது துணிகரம்.!



In Kallakurichi Thirukovilur Man Raped Young Girl 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 09ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது உறவினரான அத்தை வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். 

அத்தையின் மகன் பாலசக்தி (22) என்பவர், சிறுமியிடம் அன்புடன் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தோரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிய கயவன், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். 

சிறுமி பலாத்காரம் & கர்ப்பம்

மேலும், ஒருகட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் தெரியவருகிறது. இதனால் தற்போது பள்ளி மாணவி, நிறைமாத கர்ப்பமாகி இருக்கிறார். வீட்டில் இருந்தோரிடம் சமீபம் வரை அதனை மறைத்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்; 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.. காதல் பெயரில் கட்டாயப்படுத்தி அத்துமீறல்.!

Rape

இதனிடையே, மகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை கவனித்த தாய், அவரிடம் விசாரித்தபோது அதிர்ச்சிதரும் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாலசக்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் பாலசக்தியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த தந்தை; 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்த போலீஸ்.!