அதிர்ச்சி... கள்ளக்காதலியுடன் உல்லாசம்.!! நேரில் பார்த்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.!!



man-brutally-attacked-an-old-ager-for-spreading-his-lov

கள்ளக்காதலியுடன் இளைஞர் நெருக்கமாக இருப்பதை பார்க்க முதியவர் இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் முதியவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரின் கள்ளத்தொடர்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு கிராமத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வன். 25 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும் அருள்செல்வன் மற்றும் அவரது கள்ளக்காதலி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .

tamilnadu

நேரில் பார்த்த முதியவர்

அருள்செல்வன் அவரது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை அதே பகுதியைச் சேர்ந்த முதியவரான சீனிவாசன்(60) என்பவர் நேரில் பார்த்திருக்கிறார். மேலும் அருள்செல்வன் தனது  கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்தது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் முதியவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சி அருகே கொடூரம்... 69 வயது மூதாட்டி படுகொலை.!! தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் உட்பட 4 பேர் கைது.!!

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரமடைந்த அருள்செல்வன் இதுகுறித்து முதியவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் இருந்த அவர் அரிவாள் எடுத்து முதியவரின் முகம் மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முதியவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருள்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட 41 வயது தந்தை.!!