#BigBreaking: பாம்பன் பாலத்தில் அரசுபேருந்துகள் நேருக்குநேர் மோதி பயங்கர விபத்து.. 20 பேர் காயம்..! அதிகாலையில் சோகம்..!!



Ramesvaram pamban accident 20 injury

பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தில் அரசு பேருந்து இரண்டு பயணம் செய்தது. இந்த இரண்டு பேருந்துகளும் பாலத்தின் நடுவே எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் மோதிகொண்டு விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புபடையினர் காயமடைந்தவர்களை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

ராமேஸ்வரம்

இந்த விபத்தில் மொத்தமாக 20 பேர் காயமடைந்த நிலையில், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் பாம்பன் பாலத்தில் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் தனியார் சொகுசு பேருந்து நூலிழையில் கடலுக்குள் விழாமல் தப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.