குடிபோதையில் கொண்டாட்டம்.. கொலையில் முடிந்த வாக்குவாதம். 3 பேர் பலி.!



in Bangalore Anekal 3 Killed Holi Celebration 

ஹோலி கொண்டட்டத்தில் நடந்த தகராறில் 3 பேர் உயிரிழந்தனர். 

பீகார் மாநிலத்தில் வசித்து வரும் 6 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு, தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில், வேலை பார்த்து வந்தனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு 6 நபர்களும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்திவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென இவர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிவேகத்தில் நடந்த பயங்கரம்.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!

bangalore

இந்த மோதலில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்த கட்டை, இரும்பு கம்பி கொண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் 22 வயதுடைய அன்சு, ராதேஷி, ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவான 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "நீ குண்டா இருக்க, வரதட்சணை வாங்கிட்டு வா" - மனைவி மீது மிளகாய்பொடி தாக்குதல் நடத்தி கொடுமை செய்த கணவன்.!