நீட் பயிற்சி வகுப்பில் கொடூரம்; மாணவியிடம் அத்துமீறல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!



in Uttar Pradesh Kanpur Neet coaching center Teacher Abuse 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், காகதேவ் பகுதியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உயிரியல் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் சாஹில். இவர் தன்னிடம் பயின்று வந்த மாணவி ஒருவரை மிரட்டி காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது. 

அத்துமீறல் முயற்சி

பின் கடந்த 2023 ம் ஆண்டு மாணவியை பயிற்சி வளாகத்தின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு இருக்கிறார். பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியே வந்த நிலையில், சுமார் 10 நிமிடம் மாணவியிடம் அத்துமீற முயற்சிக்கிறார். 

இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!

அதிகாரிகள் நடவடிக்கை

இதுதொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், அதனை தற்போது அந்நிறுவனத்தின் இயக்குனர் கண்டுள்ளார். இதன்பேரில் ஆசிரியருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆசிரியர் சாஹிலை கைது செய்தனர். மாணவியின் வாக்குமூலத்தை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொட்ட சொட்ட இரத்தம்... 10 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.!! இளைஞர் கைது.!!