டிஜேவின் நெஞ்சில் பாய்ந்த குண்டு.. பாரில் இரத்தவெள்ளத்தில் சுட்டுக்கொலை.! பதறவைக்கும் வீடியோ உள்ளே.!!



Jharkhand ranchi bar DJ died by gun shot

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும பார் ஒன்றில் சம்பவத்தன்று டிஜேவாக பணியாற்றி வரும் நபருக்கும், மது அருந்த வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பெரிய துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஒரு நபர் நள்ளிரவு ஒரு மணியளவில் பெரிய அளவிலான துப்பாக்கியை எடுத்து வந்து பணிமுடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்த டிஜே வை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். 

இதையும் படிங்க: 50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!

உயிரிழந்த டிஜே

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே டிஜே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

அச்சத்தில் மக்கள்

துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி தற்போது வரை கைது செய்யப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை கொலை செய்து நகை-பணம் திருட்டு? நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!