செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!



in Uttar Pradesh Sahranpur Couple Suicide 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டம், கிஷண்புரா பகுதியில் வசித்து வருபவர் சௌரப். இவரின் மனைவி மோனா. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து, அவர்களின் அன்புக்கு சாட்சியாக இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். 

சௌரப் ஜுவல்லரி கடை வாய்த்து நடத்தி வந்துள்ளார். இவர் தொழிலதிபர்கள் குழுவையும் நிர்வகித்து வந்த நிலையில், அவர்கள் கமிட்டியில் கொடுத்த கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து தொழில் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார். 

இதனால் அதிக கடன் சுமையை எதிர்கொண்ட தம்பதிகள், ஹரித்த்வருக்கு புறப்பட்டு சென்று கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் தற்கொலை குறிப்பில், கடனில் சிக்கிக்கொண்டதால் விபரீத முடிவை எடுப்பதாகவும், குழந்தைகள் இருவரும் தாத்தா-பாட்டி வீட்டில் இருக்கட்டும் என வாட்ஸப்பில் செல்பி எடுத்து அனுப்பி தற்கொலை செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: அனுதினமும் கணவனுக்கு நரக வாழ்க்கை பரிசு; சோறு கூட போடாததால் விபரீத முடிவு.!

இதையும் படிங்க: "14 வது மாடியில் இருந்து குதிக்கணும்" - 16 வயது சிறுவனின் தற்கொலையில் பகீர் திருப்பம்.!