"14 வது மாடியில் இருந்து குதிக்கணும்" - 16 வயது சிறுவனின் தற்கொலையில் பகீர் திருப்பம்.!



Pune 16 Age boy Dies by jumping from 14th floor 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், பிம்பிரி சிஞ்சிவாட் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆர்யா ஸ்ரீ ராவ் (வயது 16). சிறுவன் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 10 ம் வகுப்பு பயின்று வருகிறார். 

சிறுவன் தற்கொலை

இதனிடையே, சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (26 ஜூலை 2024) அன்று, கட்டிடம் ஒன்றின் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: நிதிச்சுமையால் சோகம்; கடலில் விழுந்து எஞ்சினியர் தற்கொலை.!

புளூவேல் போல ஆன்லைன் கேம்

இந்நிலையில், சிறுவன் கைப்பட வரைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சிறுவன் வசித்து வரும் வீட்டின் வரைபடம் மற்றும் பால்கனியில் இருந்து குதிக்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது. இதனால் சிறுவன் புளூவேல் போன்ற ஆன்லைன் கேம் விளையாடி மரணமடைந்து இருக்கலாம் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!