ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!



in Telangana to Andhra bus Girl Raped by Driver 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இருந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. 

இந்த பேருந்தில் ஜூலை 29 ம் தேதி பெண்மணி ஒருவரும் பயணம் செய்த நிலையில், 26 வயதுடைய இளம்பெண் தனியே பயணித்து இருக்கிறார். 

ஓடும் பேருந்தில் கொடுமை

பேருந்தில் 2 ஓட்டுனர்கள் பணியாற்றிய நிலையில், பெண் தனியாக வந்ததை தனக்கு சாதகமாக்கிய பேருந்தின் ஒரு ஓட்டுநர், பெண்ணின் வாயில் துணையைப்பொத்தி அவரை பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பலாத்காரம்; 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொடுமை.!

Rape

காவல்துறை விசாரணை

பின் பேருந்தை நிறுத்தச்சொல்லி அவர் தப்பிச்சென்ற நிலையில், பெண் தனக்கு நேர்ந்த துயரத்தை கூறி இருக்கிறார். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் புகாரை பெற்று தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!