சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற மறுத்த தாய் தலை துண்டித்து கொலை: மதுபோதையில் மகன் வெறிச்செயல்.!



uttar-pradesh-sitapur-man-be-head-mother-with-blade

 

தாயிடம் சொத்து வேண்டி தகராறு செய்த குடிகார மகன், இறுதியில் அன்னையின் தலையை துண்டித்து கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டம், மேஜபூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமலா தேவி (வயது 65). இவரின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். 

இதனால் தனது மகன் தினேஷ் பாசியுடன் (வயது 35) கமலா தேவி வசித்து வருகிறார். தினேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், தாயிடம் மகன் தினேஷ் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு கமலா தேவி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 

Uttar pradesh

சம்பவத்தன்று மதுபோதையில் தினேஷ் தாயிடம் பிரச்சனை செய்ய, அவர் சொத்துக்களை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்தார். 

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே கமலா உயிரிழந்தார். அவரின்உடல் வீட்டின் வாசலிலும் கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த  அதிகாரிகள், கமலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை தேடி வருகின்றனர். பெண்ணின் தலையையும் மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.