அந்த கோலத்தில் கண்டு கண்டித்த மாமியார்.! கொன்று எரித்த மருமகள்.! நடந்த பகீர் சம்பவம்!!



daughter-in-law-killed-mother-in-law-for-illegal-affair

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வருபவர் 48 வயது நிறைந்த அலமேலு. இவரது இரண்டாவது மகன் ஏழுமலை. இவருக்கு பவித்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏழுமலை திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அதனால் அலமேலு மற்றும் பவித்ரா இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கொலைசெய்யபட்டு கிடந்த மாமியார் 

திடீரென நேற்று மாலை அலமேலு காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் அவரது மூத்த மகன் சேட்டு தாயாரை தேடி சென்றுள்ளார். அங்கு தனியார் நிலம் ஒன்றில் பாதி எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். உடனே அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அலமேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: ஏரிக்கரையில் சரக்கடித்த நண்பர்களுக்குள் தகராறு; நண்பனை போட்டுத்தள்ளிய பயங்கரம்.!

Murder

மருமகளின் தகாத உறவு 

அதாவது அலமேலுவின் மருமகள் பவித்ராவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவரான மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியுள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து அலுமேலுவுக்கு தெரிய வந்தநிலையில் அவர் தகாத உறவை கைவிடும்படி, மருமகளை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்டபாடில்லை. இந்நிலையில் நேற்று மாலை ஆடு மேய்க்கச் சென்ற பவித்ரா நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அலமேலு தேடிச் சென்றுள்ளார்.

கள்ளகாதலனுடன் கைது 

அங்கு மணிகண்டனும் பவித்ராவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அலமேலு அவர்களை கண்டித்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த மணிகண்டன் அலமேலுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் டூவீலரில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி எரித்துவிட்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா மற்றும் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

 

 

இதையும் படிங்க: சாப்பிட அழைத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்.! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!