நடத்தையில் சந்தேகம்... மனைவி கொடூர கொலை.!! கணவன் தற்கொலை.!!



man-murdered-his-wife-over-suspicion-suicide-police-enq

தென்காசி மாவட்டத்தில் மனைவியை கட்டிலில் வைத்து கொடூரமாக கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கொலை

தென்காசியை சேர்ந்த 57 வயதான சந்திரன் என்பவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கட்டிலில் வைத்து கொடூரமாக சந்திரன் படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

tamilnadu

ஜாமீனில் வெளிவந்த கொலைகாரன் தற்கொலை

சித்ராவின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சந்திரனுக்கு ஜாமீன் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று சந்திரன் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!

காவல்துறை விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: காதல் திருமணம்.. காதலனின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்.!