நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!



in Telangana Hyderabad College Student Dies Slipped from 3rd Floor 

 

மாடியில் நுழைந்த நாயை விரட்ட முற்பட்ட இளைஞர், பரிதாபமாக தவறி விழுந்து பலியானார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டம், சாந்தா நகரில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறை ஒன்றில், உதய் குமார் (வயது 20) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் தங்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: அதிவேகத்தில் சோகம்; 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி.. சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கரம்.!

இவர் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று இரவில் நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட, சாந்தா நகரில் இருக்கும் ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளார். 

அங்கு மூன்றாவது தளத்தில் நாய் ஒன்று வந்துவிட, இதனைக்கண்ட உதய் குமார் அதனை வேகமாக ஓடி விரட்டி இருக்கிறார். அப்போது, ஹோட்டலின் தரையில் இருந்த டைல்ஸ் வழுக்கி இருக்கிறது.

திறந்த ஜன்னல் வழியே கீழே பாய்ந்த சோகம்

இதனால் எதிர்பாராத விதமாக நாயை விரட்டி வந்தவர், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த ஜன்னலை திறந்தபடி கீழே விழுந்து உயிரிழந்தார். காற்றோட்டத்திற்காக வளாக பகுதியில் இருந்த ஜன்னலில் ஒன்று திறந்து இருந்துள்ளது.

வேகமாக வந்தவர் ஜன்னலை பிடித்தபோது தவறி விழுந்தார். படுகாயத்துடன் துடித்த நண்பனை மீட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிசெய்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இளைஞர் மாடியில் இருந்து கீழே தவறி விழும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கொத்தாக தூக்கி இலண்டனுக்கு அனுப்பி வைத்த காவல்துறை..!