சேலத்தில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! 64 வயது முதியவர் கைது.!!



64 year old man arrested for sexually assaulting a 15 year old girl

சேலம் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

64 வயது முதியவர்

 சேலம் மாவட்டம் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. 64 வயதான இவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பண்ணையில் பணியாற்றி வந்திருக்கிறார் பெரியசாமி. அப்போது அதே பண்ணையில் பணியாற்றிய 15 வயது சிறுமியுடன் பெரியசாமிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கர்ப்பமான சிறுமி 15 வயது சிறுமி

முதியவரை சக தொழிலாளியாக நினைத்து பழகி இருக்கிறாள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!

முதியவர் கைது

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பெரிய சாமியை கைது செய்து விசாரித்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

இதையும் படிங்க: கொடுமை... 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்கா கணவர்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை.!!