14 மாவட்டங்களில் வெளுத்தது வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Update On 16 May 2024 Evening 4 PM 

 

தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நள்ளிரவு முதல் காலை வேலையை கடந்தும் மழை தொடர்ந்து வந்ததது. 

தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை

அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியே படுத்திருக்கீங்களா?.. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

இரவு 7 மணிவரை கீழ்காணும் மாவட்டங்களில் மழை

இந்நிலையில், இன்று இரவு 7 மணிவரையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!