காதல் தோல்வியால் விரக்தி; காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் பகீர் திருப்பம்.!



in Kanchipuram Medial College Student Dies by Suicide Love Failure 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மாணவி ஷெர்லின். இவர் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். 

இவர் தன்னுடன் பயின்று வந்த சக மாணவரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சமீபத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். மாணவரும் மனைவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

மாணவி தற்கொலை

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவருக்கு தொடர்பு கொண்ட மாணவி, காதலரை தன்னுடன் பேச வற்புறுத்தி இருக்கிறார். தன்னிடம் பேசாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறிய நிலையில், அவர் காதலி கோபத்தில் இருக்கிறார் என அலட்சியப்படுத்தியதாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!

இந்நிலையில், காதலர் தான் சொல்வதை கேட்காத ஆத்திரத்தில் கீழே குதித்த மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் பலரும் கீழிருந்து குதிக்க வேண்டாம் என கதறியும் பலன் இல்லை. பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் மேலே செல்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது. 

மாணவி தற்கொலை செய்துகொண்ட வீடியோ

வீடியோ நன்றிநியூஸ்தமிழ் 24X7

இதையும் படிங்க: திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான மகள்; உண்மையை அறிந்து தாய் விபரீதம்.. பறிபோன உயிர்.!