கள்ளக்காதலால் விபரீதம்... உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்... பதற வைக்கும் பின்னணி.!!



man-commits-suicide-due-to-illicit-relationship-police

சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை  விசாரணை நடத்தி வருகிறது.

சக ஊழியருடன் கள்ளக்காதல்

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் ரத்னம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. 38 வயதான இவர் அண்ணா நகரில் உள்ள கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் 2 வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் பாலாஜிக்கும் அவருடன் பணியாற்றும் சக ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

tamilnadu

குடும்பத்தில் தகராறு

இதனைத் தொடர்ந்து பாலாஜி மற்றும் அவரது மனைவி சந்தியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சந்தியா மற்றும் பாலாஜி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்தியா தனது குழந்தையை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

இதையும் படிங்க: கதறிய கள்ளக்காதல் ஜோடி... பதறிய கணவன்... அட்வைஸ் கூறி அனுப்பி வைத்த காவல்துறை.!!

தற்கொலை செய்து கொண்ட பாலாஜி

இந்நிலையில் சந்தியா வியாழக்கிழமை காலை பாலாஜியை செல்ஃபோனில் அழைத்துள்ளார். அவர் போனை எடுக்காததால் தனது கணவர் வீட்டுக்கு வந்திருக்கிறார் சந்தியா. அப்போது பாலாஜி வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு சடலமாக  தொங்கி இருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா கதறி அழுதிருக்கிறார்.

காவல்துறை விசாரணை

அவரது கதறல் சுத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!