பச்ச பிள்ளைய... பயங்கரம்... 4 வயது சிறுவனை கொலை.. தாய் மற்றும் மகள் தற்கொலை... காவல்துறை விசாரணை.!



terrible-in-tirupur-mother-and-daughter-commit-suicide

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே  நாலு வயது சிறுவனுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டு அந்த சிறுவனின் தாய் மற்றும் பாட்டி  தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேவுள்ள கன்னிவாடி மேற்கு தெருவில் வசித்து வந்த தமிழரசி(52). இவரது மகள் நேசவள்ளி ஜோதிபாசு என்பவருடன் திருமணம் நடைபெற்று நான்கு வயதில் திலக் கலாம் என்ற மகன் இருந்தான். கூலித் தொழிலாளியான ஜோதி பாசு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தமிழரசி, நேசவள்ளி  மற்றும் திலக்கலாம் ஆகியோர்   சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர்.

tamilnadu

இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால்  வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன்  இவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது திலக்  கலாம்  வீட்டு தின்னையில் தூக்கில் தொங்கி இருக்கிறார். மேலும்  நேசவள்ளி  வீட்டின்  உட்புறத்தில் தூக்கில் தொங்கி இருக்கிறார். பாட்டி தமிழரசி மட்டும் உயிருக்கு போராடி  கொண்டிருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சுப்பிரமணியன்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழரசியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

tamilnadu

மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  இறந்த இரண்டு பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவினில்  அனுமதிக்கப்பட்டிருந்த தமிழரசி  வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இறப்பதற்கு முன்பாக அவர் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பழனியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  தாராபுரத்தில் வந்து குடியமர்த்ததாக தெரிவித்துள்ளார். நேசவள்ளியை ஜோதிபாசு கைவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து திலக்கலாமுக்கு எலி மருந்து மற்றும் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் பின்னர் தமிழரசியும் நேசவள்ளியும் எலி மருந்தை  சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால்  காலையில் எழுந்து பார்த்தபோது திலக்கலாம் மற்றும் நேசவள்ளி தூக்கில் பிணமாக தொங்கியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.