ஒருநாளைக்கு 3 முறை.. ஆபாச படத்திற்கு அடிமையான மனைவியால் கதறிய கணவர்.. விவாகரத்து கொடுத்த நீதிமன்றம்.!



a Wife force Husband to Sexual Activity per day 3 Times Punjab Court Gives Divorce to Husband 

 

ஆபாச படம், செல்போன் கேமுக்கு அடிமையான மனைவி, கணவரை நாளொன்றுக்கு 3 முறை உடலுறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததால் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதான வழக்காக இவ்வழக்கு கவனம் பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இவர் அதீத உடலுறவு வேட்கை கொண்டவர் என கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிந்ததில் இருந்து நாளொன்றுக்கு கணவரை குறைந்தது 3 முறை தனிமையில் அழைத்துச் செல்வார். 

இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!

நாளொன்றுக்கு 3 முறை

தொடக்கத்தில் மனைவியின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாதவர், நாட்கள் செல்லச்செல்ல அதில் வெறுப்பு அடைந்துள்ளார். இதனால் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்திருந்தார். 

18 plus

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், கணவரிடம் வாக்குமூலத்தை பெற்று, மனைவியிடமும் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லாத மனைவி, அம்மாநில உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தார். 

விவாகரத்து செல்லும்

மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும், கணவரின் நிலைமையை புரிந்துகொண்ட, அவருக்கு வழங்கிய விவாகரத்து தீர்ப்பு செல்லும் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபரின் மனைவி கண்ணீருடன் வீடு திரும்பி இருக்கிறார். 

இந்த வழக்கு நீதிபதி சுதிர் சிங்  மற்றும் நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

18 plus

ஆபாச படத்திற்கு அடிமையான பெண்

அதாவது, செல்போனில் கேம், ஆபாச வீடியோ ஆகியவற்றுக்கு அடிமையான மனைவி, நாளொன்றுக்கு 3 முறை உடலுறவு கொள்வது, இரவு நேரத்தில் நெருங்கினால் அடுத்தடுத்து 3 முறை கணவரை வற்புறுத்தி உடலுறவு வைப்பது என இருந்து வந்துள்ளார். 

கடந்த 2017ல் தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தாலும், இருவரும் சில மாதங்களில் மேற்கூறிய விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து தற்போது நீதிமன்றத்தால் அவர்களின் விவாகரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கொள்ளைக்கும்பலை தனியாக எதிர்கொண்ட சிங்கப்பெண்; பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள்.. குவியும் பாராட்டுக்கள்.!