முதல் மேடைப் பேச்சில் தெறிக்கவிட்ட ஜஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் மகள்!பேத்தியை பார்த்து நெகிழ்ந்துபோன அமிதாப் பச்சன்!



amitabachan shocked for Granddaughter speech

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஜஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதியின் மகள் ஆராத்யா பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதியின் மகள் ஆராத்யாவின் முதல் மேடைப் பேச்சைக் கேட்பதற்காக அபிஷேக்கும் ஐஸ்வர்யா ராயும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். அங்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராத்யா கரம்சரமாக பேசியிருந்தார்.

பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆராத்யாவின் பேச்சை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் ஷாரூக்கானும் அவரது செல்போனில் ஆராத்யாவின் பேச்சை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது பேத்தியின் பேச்சால் பெருமை கொள்வதாக அமிதாப் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருது தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.