இன்னும் சற்று நேரத்தில் அயோத்தி தீர்ப்பு! தமிழகம் முழுவதும் உஷார் நிலை!



ayodhya-judgement

 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நிறைவடைந்தது, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் வரும் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 9 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ayodhya judgement
இதனையடுத்து சென்னையில் காலை முதல் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பில் உள்ள காவலர்கள் உடனே பணிக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. மேலும், முக்கிய கோயில்கள், மசூதிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் காலவர்கள் விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டனர்.