சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; கட்டையை எடுத்து வந்து கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்.!



delhi-modern-town-pedestrian-attacked-by-man

 

டெல்லியில் உள்ள வடக்கு டெல்லி, மார்டன் டவுன் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ராம் பால், சம்பவத்தன்று பூங்காவுக்கு அருகே இருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த ஆர்யன் என்பவர், பூங்காவுக்கு அருகில் சிறுநீர் கழித்துள்ளார். 

இதனைக்கவனித்த ராம் பால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வந்துசெல்லும் இடத்தில் இவ்வாறு செய்யலாமா? என ஆர்யனை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். 

இதையும் படிங்க: "அம்மா வலிக்குதுமா.." ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்ட 6 வயது சிறுமிகள்.!! பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர்.!!

சம்பவம் நடந்த மறுநாளில் சோகம்

இதனிடையே, மறுநாள் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வருகை தந்த ஆர்யன், சாலையோரம் உறங்கிக்கொண்டு இருந்த ராம்பாலை தடியால் பயங்கரமாக தாக்கினார். பார்க்கவே பதறவைக்கும் வகையில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த விஷயம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.  

கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடையெப்ற்றதாக அதிகாரிகள் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: "தோழியை பலாத்காரம் செய்ததால் டாக்டரை கொன்றோம்.." சிறுவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்.!!