"அம்மா வலிக்குதுமா.." ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்ட 6 வயது சிறுமிகள்.!! பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர்.!!



6-six-year-old-girls-raped-in-bus-by-the-driver-shockin

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் பேருந்தில் வைத்து 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

தனியார் பள்ளி

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் புனே நகரின் வானெவாரியே என்ற பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

India

பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் அந்தப் பேருந்தின் ஓட்டுனரான 45 வயது மதிக்கத்தக்க நபர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது 2 சிறுமிகளையும் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமிகள் தங்களது பிறப்புறுப்பில் வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பெற்றோர் சிறுமிகளிடம் கேட்டபோது அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மோதியதில் 10 பேர் பலி.! கோர விபத்து.!

வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர் காவல்துறையில் புகாரளித்தனர். இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். 6 வயது சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "தோழியை பலாத்காரம் செய்ததால் டாக்டரை கொன்றோம்.." சிறுவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்.!!