"மனைவி வீட்டில் வெட்டியாக இருந்தால் பணம் கிடையாது" - கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பெண்ணுக்கு ஆப்படித்த பரிதாபம்.!



karnataka-hc-judgement-pension-for-wife-from-husband

 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியில் பெண்மணி கணவரிடமிருந்து விவாகரத்துக்கு கோரி இருக்கிறார். வழக்கு விசாரணையில் நீதிமன்றம் மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து கணவர் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு விசாரணை அம்மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், இருதரப்பு வாதத்தையும் குறித்துக்கொண்டனர். 

karnataka

தற்போது இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, "மனைவி வீட்டில் சும்மா இருந்து கொண்டு கணவரிடம் முழு பராமரிப்பையும் பெற இயலாது. பெண்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்ய சில முயற்சிகளை எடுக்க வேண்டும். ஜீவனாம்சம் மாதம் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக குறைக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளார்.