துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசப்பட்ட பெண்.! முதியவரின் வெறிச்செயல்.! திடுக் சம்பவம்!!



Man killed girl and cut the parts

கடந்த ஜூன் 9 ஆம் தேதி மத்தியப்பிரதேசம் இந்தூர் ரயிலில் நிர்வாணமாக பெண்ணின் உடல் ஒன்று துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதே போல ஜூன் 10 ஆம் தேதி உத்தரகண்ட் ரிஷிகேஷ் ரயிலில் ஒரு பையில் பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் கிடந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் சென்ற பெண் 

இதற்கிடையில் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள பில்பாங்க் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின் இரு பெட்டிகளிலும் கண்டெடுக்கப்பட்டது காணாமல் சென்ற பெண்ணின் உடல் என்பது தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: 37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!

Murder

தூக்கமாத்திரை கொடுத்து பலாத்காரம் 

அதாவது அந்த பெண் கணவருடன் சண்டை போட்டுவிட்டு உஜ்ஜைனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரா செல்வதற்காக வந்துள்ளார். அப்பொழுது 60 வயதுமிக்க கமலேஷ் படேல் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின் அவருக்கு தெரியாமல் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மயங்கிய நிலையில் அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் 

திடீரென மயக்கத்தில் இருந்து எழுந்த அந்த பெண் நிலைமையறிந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் கமலேஷ் படேல் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் போட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை; தூக்கத்திலேயே பறிபோன உயிர்.!