தாயுடன் உறங்கிய 3 வயது சிறுமி பலாத்காரம்; 25 வயது இளைஞன் அதிர்ச்சி செயல்..!



  New Delhi Rohini 3 Year Old Girl Raped

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது. பட்டப்பகலில் நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள், தேசிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் வசித்து வந்த பெண்மணி, சம்பவத்தன்று தனது வீட்டு வாசலில் உள்ள கட்டிலில், 3 வயது குழந்தையுடன் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

சிறுமி பலாத்காரம்

இதனிடையே, தாய் விழித்து பார்த்தபோது மகள் இல்லாததால், அவரை அக்கம் பக்கத்தில் தேடி இருக்கிறார். அங்கும் மகள் காணாததை தொடர்ந்து, அங்குள்ள பேகம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க: பசுவைக்கூட விட்டுவைக்கல.. பசுவை பலாத்காரம் செய்த 50 வயது வழக்கறிஞர்.!!

இதனிடையே, சிறுமி அங்குள்ள புதரில் இருந்து மீட்கப்பட்டார். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த 25 வயது இளைஞனை காவல் துறையினர் கைது செய்தனர். 

விசாரணையில், தாயுடன் உறங்கிகொண்டு இருந்த சிறுமியை, நள்ளிரவு நேரத்தில் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்த கொடூரன், அவரை அப்படியே புதரில் வீசி சென்றுள்ளான். சிறுமி உயிர்தப்பினார்.

இதையும் படிங்க: ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.!