கர்நாடகாவில் பரபரப்பு.. ரூ. 500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இளைஞர்கள்.. அதிரடியாக கைதான சம்பவம்..!



sensation-in-karnataka-rs-500-youth-who-tried-to-circul

கர்நாடக மாநிலம் மங்களூரில் நான்கரை லட்சம் ரூபாய் கான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இளைஞர்களை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரை சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் நஜும் ஆகிய இருவரும் கோயமுத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ஒருவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கியதாக போலிசாரிடம் கூறியுள்ளனர்.

karnataka

இதனையடுத்து இவர்களிடமிருந்து வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து கோவை போலீசாருடன் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.