ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி கர்நாடகா பண்ணையில் திருட்டு..!!



tomatoes-worth-rs15-lakh-stolen-from-karnataka-farm

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடிச் சென்றுள்ளனர். 

கர்நாடகாவில் உள்ள சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததாலும், உரங்களின் விலை உயர்வாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது பெங்களூரில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் இருந்து அடையாளம் தெரியாத சிலர் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோனி சோமனஹள்ளி கிராமத்தில்  உள்ள பண்ணையில் அடையாளம் தெரியாத சிலர் 50-60 பைகளுடன் நுழைந்து, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை திருடிவிட்டு தப்பிச்சென்றனர். 

பண்ணைக்கு வந்த விவசாயி தரணி, தக்காளி திருடு போனதைக் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் ஹலேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.