எருமை மாட்டுக்கு இம்புட்டு அறிவா? வலைதளவாசிகளை வியக்கவைக்கும் வீடியோ!
இந்த உலகின் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் வித்தியாசமான சம்பவங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி ஒரே இரவில் ட்ரெண்டாகிவிடுகிறது. அந்த வகையில் டிவிட்டர் வாசி ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என கேக்குறீங்களா? பொதுவாக யாரவது ஒருவர் தவறான செயலை செய்துவிட்டால், அறிவு கெட்ட எருமை என திட்டுவது வழக்கம். இந்த வீடியோவை பாத்தீங்கன்னா, இனி அறிவு கெட்ட எருமைனு சொல்ல மாட்டீங்க. காரணம், அடி பம்பு ஒன்றில் தானே தண்ணீர் அடித்து அந்த தண்ணீரை அந்த எருமை மாடு குடிக்கிறது.
அடடா! எருமை மாட்டுக்கு இம்புட்டு அறிவா என வலைதளவாசிகள் அந்த வீடியோவை வியந்து பார்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
அறிவு கெட்ட எருமமாடே என்று யாரும் இனி திட்டக்கூடாது pic.twitter.com/49WPXoaGRG
— ֆɛռTɦɨʟஆதிபன்😘😇 (@senthilaadhiban) December 27, 2019