#JustIN: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த நோயாளிகள், மருத்துவர்கள்.!



Chengalpattu Govt Hospital Eye Treatment Section Fire Accident 

 

மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கண் சிகிச்சை பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று கண் சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், மருத்துவர்கள் & நோயாளிகள் இருக்கும்போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறினர்.

நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.