"இந்தியாவுக்கே புதிய விடியல்.. இன்னும் 3 நாட்கள் தான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!



DMK President & TN CM MK stalin 1 June 2024 tweet 

 

2024 மக்களவை தேர்தலின் இறுதிக்கட்டம் நெருங்கி, ஜூன் 04 ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. இந்த முடிவுகளை எதிர்பார்த்து 2 முறை ஆட்சியமைத்த பாஜகவும், 2 முறை ஆட்சியை தவறவிட்ட காங்கிரசும் காத்திருக்கிறது. இந்த முறை மக்களின் பேராதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்ற வியூகத்துடன் காங்கிரஸ் கூட்டணி களமிறங்கியுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? - சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!

ஜூன் 04ல் புதிய விடியல் 

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு தீவைத்த மர்ம நபர்கள்; அறந்தாங்கியில் அதிர்ச்சி.!