திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு தீவைத்த மர்ம நபர்கள்; அறந்தாங்கியில் அதிர்ச்சி.!



Pudukkottai Aranthangi DMK Water Pandal Fire 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு தணிக்கும் வகையில், திமுக சார்பில் நீர், மோர் பந்தல்கள் பல இடஙக்ளில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நேற்று அறந்தாங்கி பகுதியில் உள்ள நீர் பந்தல் இரவில் தீப்பிடித்து இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் கட்சியினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை க்டுட்படுத்தினர். மேலும், அக்கட்சியின் நிர்வாகிகள் ராமநாதன், பழனி ஆகியோரின் சார்பில் காவல் நிலையத்திலும் நீர், மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.