சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு காத்திருந்த ஷாக்.! வைரலான வீடியோவால் சிக்கல்!!



man-arrested-for-cook-and-eat-snake

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் வசித்து வருபவர் 30 வயது நிறைந்த ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று, அதனை சமைப்பதற்காக தோலை உரித்து, வெட்டி சுத்தம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் 

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் ராஜேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: உணவு டெலிவரி செய்யபோன இடத்தில் அத்துமீறிய நபர்.! இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.! அதிர்ச்சி சம்பவம்!!

snake

வாலிபர் கைது 

அப்பொழுது ராஜேஷ்குமார் தான் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: என் ஆசைக்கு இணங்கு.! இல்லைனா.. அந்த வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய காவலாளி!!