பெயிண்டர் வெட்டிக்கொலை... மனைவியின் மேலாளர் சரண்... கொலைக்கான காரணம் என்ன.? ... தீவிர விசாரணை.!



near-trichy-painter-hacked-to-death-one-person-surrende

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பெயிண்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பந்தல் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் சரண் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருவெறும்பூர் கீழக் குமரேசபுரம் மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 48. இவருக்கு சமுத்திரவள்ளி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்கள் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் மூன்றாவது மகள் திருவெறும்பூரில் படித்து வருகிறார். சரவணன் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார்.

tamilnaduஇந்நிலையில் சரவணனின் மனைவி தனது கடைசி மகளை அழைத்துக் கொண்டு இரண்டு மகள்களை பார்ப்பதற்காக சென்னை சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த சரவணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tamilnaduமேலும் இந்த படுகொலை சம்பந்தமாக லால்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் காவல்துறையிடம் சரண் அடைந்திருக்கிறார். இவர் பந்தல் ஒப்பந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்தில் தான் கொலை செய்யப்பட்ட சரவணன் மனைவி சமுத்திரவள்ளி வேலை செய்து வருகிறார். ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் சரவணன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.