அடப்பாவமே... 16 வயது சிறுமி கர்ப்பம்... பெற்றோர் செய்த விபரீத செயல்.!



terrible-in-tirupur-district-16-year-old-girl-pregnancy

திருப்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை மறைக்க பெற்றோர் செய்த விபரீதத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் முத்தன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  அவரது கருவை கலைக்க முயன்றுள்ளனர். அப்போது எந்த ஒரு மருத்துவரின்   பரிந்துரையும் இல்லாமல் அருகிலிருந்த மருந்தகத்தில்  கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி சிறுமிக்கு கொடுத்திருக்கின்றனர்.

tamilnadu

சித்த மருந்துகளை சாப்பிட்ட சிறுமிக்கு அலர்ஜியானதால் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார் இதனைத் தொடர்ந்து அவரை  திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிஜே பலனின்றி கடந்த  ஜூன்  27ஆம் தேதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களின் புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

tamilnadu

மேலும் காவல்துறையின் விசாரணையில் சிறுமியின் பெற்றோர் முத்தனம்பாளையம்  சாலையில் அமைந்துள்ள மருந்தகத்தில் மருந்துகளை வாங்கியது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முறைகேடான மருந்துகளை விற்ற  வர்த்தகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் போன்ற விஷயங்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.