தினமும் குடித்துவிட்டு வந்து தாயை கொடுமை செய்த தந்தை.. ஆத்திரமடைந்த மகனின் கொடூர செயல்.!



The father who came drunk everyday and abused his mother.. The cruel act of the enraged son.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பனங்காட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் கூலித் தொழிலாளியான பாபு - வசந்தாமணி தம்பதியினர். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக சதீஷ்குமார் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு உள்ளார். இதனால் சதீஷ்குமார் தனது மனைவியுடன் சத்தியமங்கலம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

Murder

மேலும் கூலி தொழிலாளியான பாபு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி வசந்தாமணியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்த பாபு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த சதீஷ்குமார் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.