திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன்..நடுரோட்டில் 45 வயது பெண் எடுத்த விபரீத முடிவு.!



Woman-commits-suicide-by-setting-fire-to-a-road

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை(45). இவருக்கு திருமணமாகி நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தெய்வானையின் கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வேலைக்காக தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது.நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

fire

இந்நிலையில் தெய்வானை அந்த வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தெய்வானை நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெய்வானை தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண் காணிப்பு கேமராவில் பதிவாகியது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.