பிக் பாஸ் இல்லத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்படுகிறார் ரஞ்சித்? விபரம் உள்ளே.!



Bigg Boss Tamil 8 First Elimination Contestant May Ranjith 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல், போட்டியாளர்கள் தங்களின் முதல் 6 நாட்களை நிறைவு செய்துள்ளனர். முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் முறையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை வெளியேற்றப்பட வாய்ப்புள்ள போட்டியாளர்களில் ரஞ்சித், ரவீந்தர் ஆகியோர் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றனர். சனிக்கிழமையான இன்று போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார். 

இதையும் படிங்க: "மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!

சிக்கலில் ரஞ்சித் - ரவீந்தர்

அப்போது, ரவீந்தர் - ரஞ்சித் சேர்ந்து செய்த பிராங்க் தொடர்பான விவாதத்தில், அதிகம் பிரச்சனை எழுந்தது. போட்டியாளர்கள் பலரும் ரவீந்தருக்கு எதிராக திசைதிரும்ப, அதனை விசாரிக்க வந்த விஜய் சேதுபதியும், பிரச்சனையை கேட்டுவிட்டு எதுவும் பதில் கூறாமல் இருந்தார். 

இந்த விஷயத்தில் ரவீந்தர் தான் சரியாக சிக்கிக்கொண்டோம் என நினைத்த நிலையில், ரஞ்சித்தை பலரும் மறந்தனர். ஆனால், வந்த சில நேரத்தில் விஜய் சேதுபதி ரஞ்சித்தை உங்களின் மறுமலர்ச்சி படம் சிறந்த படம் என கூறினார். அதேபோல, ரஞ்சித், ரவீந்தர் பிராங்க் தொடர்பாக விவாதிக்கும்போது மறுமலர்ச்சி படத்தின் தலைப்பு பேச்சுவாக்கில் கூட்டப்பட்டது. 

காத்திருப்போம்

இதனால் இந்த இரண்டு விவகாரத்தையும் தொடர்புபடுத்தியுள்ள நெட்டிசன்கள், ரஞ்சித்திடம் நாளை நியாயம் கேட்டு அவரையே முதல் போட்டியாளராக எலிமினேஷனில் வெளியேற்றலாம் என கூறி வருகின்றனர். ஆனால், நாளை இரவு உண்மை தெரிந்துவிடும் என்பதால், அதுவரை நாம் காத்திருப்போம்.

குறும்படம் மிஸ்ஸிங்

போங்காட்டம்

இதையும் படிங்க: நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ லீக்? நெட்டிசன்கள் பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!