ஹங்கேரியில் அரை நிர்வாணத்தில் ஓடிய ஆண், பெண்கள்.. காரணம் என்ன?
ஹங்கேரியில் அரை நிர்வாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹங்கேரி நாட்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அரை நிர்வாணத்தில் பங்கேற்றனர். மைனஸ் டிகிரிக்கு குறைவான குளிரில் வெறும் கால் சட்டை மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பி அணிந்து கொண்டு பாட்டு பாடியபடி அவர்கள் ஓடியதை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
மேலும் இந்த ஓட்டப்பந்தயத்தின் மூலம் கிடைத்த நிதியை ஹங்கேரியா தொண்டு நிறுவனத்திடம் ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் வழங்கியுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.